முச்சந்தி

சஜித் தலைமையிலான அணியில் உருவாகியுள்ள மும்முனைப் போர்; கட்சிக்குள் பலமான வாதம்?

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவரது பதவியிலிருந்து எதிர்வரும் சில நாட்களுள் நீக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் தற்போது மும்முனைப் போர் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பதவிக்கு கபீர் ஹசிம் நியமிக்கப்பட வேண்டும் என ஒரு குழு தெரிவித்து வருகிறது.

தென் மாகாணத்தின் வாக்குகளை இலக்கு வைத்து தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபருக்கு பதவி வழங்கப்பட வேண்டுமென மற்றுமொரு குழுவும், பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும் என வேறொரு குழுவும் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் செயற்பாட்டின் இழப்பினால் ஏற்படும் பாதகத்தை தவிர்க்கும் உத்தியாகவே, குறித்த பதவி பெண்ணொருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பலமான வாதம் ஏற்பட்டுள்ளது.

மூன்று குழுக்களாக பிரிந்து கிடக்கும் இந்த சித்தாந்தவாதிகளின் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button