Uncategorized

இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றவுள்ள ஆடுகள்!

ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆடுகள் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜம்னாபாரி, கொட்டுகச்சி, போயர், சான் ஆகிய ஆடு இனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *