இலங்கையின் பழம்பெரும் சிறப்புவாய்ந்த நாணயத்தாள் பல இலட்சங்களுக்கு ஏலம்!

இலங்கையின் பழம்பெரும் நாணயத்தாள் ஒன்று பல இலட்சங்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள நாணயத்தாள் இரண்டு ரூபா பெறுமிதியுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாணயத்தாள் இலங்கையில் அச்சிடப்பட்ட ஏனைய நாணயத்தாள்களிலும் விட தனித்தவமானதும் சிறப்பு வாய்ந்ததும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1917ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்றே நான்கரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு ரூபாய் நாணயத்தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு. இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

அதன் பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். இலங்கை சுதந்திர முத்திரை ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் எஸ். என். ஜாக்சன், பழைய நாணயத்தாள்களின் ஏலத்தில் இந்த வகை நாணயத்தாள்களுக்கு அதிக மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button