ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின், கமல்!
‘முதல்வரையும் கூப்பிடுங்கன்னு சொல்லியிருக்காரு பா…” என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
”எந்த விழாவுக்கு ஓய்…” எனக் கேட்டார், குப்பண்ணா.
”கமலின், மக்கள் நீதி மய்யம் சார்புல, பிப்ரவரி மூணாவது வாரம், சென்னையில ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு பண்றாங்க… இதுக்கு, காங்., – எம்.பி., ராகுலுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க பா…
”பிப்ரவரி இரண்டாவது வாரம், சத்தீஸ்கர்ல காங்., மாநாடு நடக்க இருக்குது… அது முடிஞ்சதும், தமிழகம் வர்றதா ராகுல் உறுதி தந்திருக்காரு பா…
”அதே நேரம், ‘தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஜல்லிக்கட்டு விழா வுக்கு கூப்பிடுங்க’ன்னு, மய்யத்துகாரங்களுக்கு சொல்லியிருக்காராம்… ஒரே மேடையில ராகுல், ஸ்டாலின், கமல் ஆஜராகி, கூட்டணியை உறுதிப்படுத்த இருக்காங்க பா…” என்றார், அன்வர்பாய்.
![]()