மதங்கடந்த மாபெரும் தைப்புத்தாண்டே மலர்க!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

ஆண்டு முழுதும் கழனிவாழ் உழவர் தொட்டு அனைவர்க்கும்ஆண்டவனாய் நின்று எம்மை காத்து நிற்கும் ஆதவன்நீண்ட வானில் நீந்திவந்து நாம் நிலைத்திடஅருள்பவன்தீண்டாமை கூடாதெனக்கூறி சுட்டெரிக்கும்
தூயவன்நட்ட கல்லை தெய்வமென்னு நாலு பூக்கள் சூடாமலேதொட்டால் தீட்டென சட்டம் போட்டாலதற்கு அடங்காமலேஎட்டாத தூரத்தில் இருக்கிறான் சமமாகவும்என்பதாலேகிட்டுவான் ஒளிக்கதிரால் நம்மைத் தொட்டும்மகிழ்ந்திடமதங்கடந்து இனங்கடந்து மாநிலத்தார் மகிழ்ந்திடஇதமாயிருப்பவன் இங்கிருக்கும் இறைவன் அல்லவாபதமாய் இணைந்து பாரிலுள்ளார் தொழுதும் நிற்கிறார்நிதமும் கொண்டாடுவார் அறுவடைக்கு துணைநிற்பதால்தமிழராய் நாம் ஒன்றினைய தக்க ஒரு விழா தந்தவன்அமிழ்தினும் இனிய பொங்கலை உண்டுமகிழ வைத்தவன்கமழும் இன உணர்வாலே தமிழராய் நம்மை இணைத்தவன்எமக்கு இப்புவியில் ஏற்றதோர் புத்தாண்டைகொடுத்தவன்பொங்கலொ பொங்கலென்ற போற்றிப் புகழ் பாடுவோம்மங்கலமாய் அனைவரும் ஒன்றாய் ஆதவனை வணங்குவோம்எங்களுக்கும் காலம் வருமென்று இன்பமாய் வாழுவோம்பங்கமேதும் வந்திடாதென பகலவனைத் தொழுதிடுவோம்!-சங்கர சுப்பிரமணியன்.
![]()
![]()