இரண்டு உலகத் தமிழ்ப் பாராளுமன்றங்கள்!…. ( கட்டுரை ) …. ஏலையா க.முருகதாசன்.

(இந்தப் பதிவு கேலிக்கும் கிண்டலுக்குமாக எழுதப்படவில்லை.பட்டனுபவங்களால் பட்டறி கொண்ட இலங்கைத் தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையாய் இன்னும் பயன்படுத்தப்படுகிறான் என்பதன் யதார்த்தத்தைச் சொல் முயற்சிக்கிறது இப்பதிவு)
ONE NAME TWO STRUCTURES
இரண்டு உலகத் தமிழ்ப் பாராளுமன்றங்கள்!….
இணையத்தளங்களை பார்வையிட்டவர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகநூல்வழியாக முகநூல் நண்பர்களுக்கு தமிழகம் மதுரையில் இருந்து; அறிமுகமான உலகத் தமிழ் பாராளுமன்றம் பற்றி அறிந்திருபபார்கள்.இது ஒரு பாராளுமன்றம்.
இரண்டாவது உலகத்தமிழ்ப் பாராளுமன்றம் எதுவென்றால் அண்மையில் பொதுமக்களின் கவனத்திற்கு உட்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் அங்கம் வகித்த எங்கள் நாட்டுக்காரர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களும்,வட மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சிவி.விக்னேஸ்வரன் அவர்களும் அதில் கௌரவ அங்கத்தினர்களாக இருக்கச் செய்தமையை பார்வையிட்டவர்கள் ஓ …இது நல்ல பாராளுமன்றம் என்றுகூட எண்ணலாம்.
இந்தப் பாராளுமன்றம் உலகத்தமிழர்களை அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகளில் அங்கம் வகிச் செய்வதாகும் என அறிமுக முன்னுரையில் செல்வகுமார் அவர்கள் சொல்லியுள்ளார்.
அமெரிக்கா கனடா உட்பட பெரும்பர்னமையான ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்று பணிபுரிந்து வரும் இளம் தலைமுறைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள உள்ஆட்சிகளிலும் நடுவண் அரசுகளிலும் பங்கேற்று வருகின்றனர். இது கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களில் ஏற்பட்ட மாற்றமாகும்.எனவே இப்பொழுது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உலகத் தமிழ் பாராளுமன்றத்தின் முன்னுரையின்படி இனித்தான் தமிழர்களை அரசியலில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்ற நிலை இல்லை.இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் வைத்திருக்கும் கலை இலக்கிய சமூக மன்றங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் தெரியாது.தமிழகத் தமிழர்களும் பல மன்றங்கள் வைத்திருக்கிறார்கள்.இலங்கைத் தமிழர்களும் வைத்திருக்கிறார்கள்.இரு பகுதியினருக்குமே மற்றவர்கள் பறறித் தெரியாது.’இருக்கா….அப்படியா’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.
இலங்கை தமிழகம் தவிர்ந்து மலேசியா, சிங்கப்பூர,மொரிசியஸ்,பிஜித்தீவு ஆகிய நாடுகளின் அரசாங்கங்களில் தமிழர்கள் அங்கம் வகித்துக்
கொண்டிருக்கின்றனர்.பல்லின நாடுகளின் அரசாங்கங்களில் இன விகிதாசார அடிப்படையில்தான் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை செல்வகுமார் அவர்கள் அறியாதவர் அல்ல.
ஐக்கிய நாடுகள் சபையென்றால் அதோடொட்டி போர்க்குற்ற விசாரணை நினைவலைகளும் எங்களுக்கு வரும்.இந்தப் பாராளுமன்றப் பொறுப்பாளர் செல்வகுமார் நாங்கள் இனப்படுகொலை பற்றி எதுவுமே ஐக்கிய நாடுகள் சபையில் பேசமாட்டோம் எனச் சொல்லிவிட்டார்.
ஆனால் அதில் கௌரவ அங்கத்தினராக அங்கம் வகிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் போர்க்குற்ற விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை நிர்ப்பந்திப்போம் என்று தேர்தல் காலங்களில் முரசொலியுடன் சங்கொலியும் எழுப்பியவர்.இதைவிட அவரின் கட்சியில் இருக்கின்ற சட்டத்தரணியான சுகாஸ் அவர்கள் தேர்தல் காலங்களில் பேட்டி கொடுத்த போது இரண்டு கைகளையும் மேசையில் வைத்து இடமிருந்து வலமாக இரண்டு செற்றிமீற்றர் உயரத்துகக கையைத் தூக்கித் தூக்கி வைத்து இலங்கை அரசாங்கத்தை ஒல்லாந்திலிருக்கும் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று சூளுரைத்தவர் வாக்குகளை வாங்குவதற்காக. தனது ஓய்வு காலத்தில் எதையாவது செய்ய வேண்டுமென்பதற்காக தேர்ந்தெடுத்த பொழுது போக்குத்தான் சிவி விக்னேஸ்வரன் அவர்களுடைய அரசியல் பயணம்.
இதுவரையில் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற கற்பிதம் செய்யப்பட்டு,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது உள்ள வெறுப்பால் சிவி விக்னேஸ்வரன் அவர்களையும்,கஜேந்திரகுமார் அவர்களையும் சில தமிழர்கள் ஆதரித்தார்கள.; இரு பகுதினரின்; கொள்கைத் திரவகம் ஒன்றுதான் கொள்கலன்களதான்; வேறு வேறு.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்த கொள்கலனைவிட மற்றவர்கள் வைத்திருந்த கொள்கலன் வடிவானது போலத் தோன்றியதால் கொள்கையை எட்டிப் பார்க்காது கொள்கலனுக்கே முக்கியம் கொடுத்தனர் நம்மில் சிலர்.
இந்த இரண்டாவது பாராளுமன்றத்தில் கனடா மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கரி ஆனந்தசங்கரி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.கனடாவின் மத்திய அரசில் மட்டுமல்ல,அந்நாட்டின் உள்ளாட்சிச் சபைகளிலும் படிப்படியாக தமிழர்கள் அங்கம் வகித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் அவர்கள் ஒரு போதும் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிக் கதைக்கப் போவதில்லை.அவருக்கு தன்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய தோட்டத் தொழிலாளர்களுக்குச் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கின்றது. இன்னும் தோட்டத் தொழிலாளர்கள் நவீனமயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றப்படவில்லை, இன்னும் லயன் என்ற குடிசையில் வாழ்கிறார்கள். மழைக்கால மண் சரிவுகளில் அகப்படுகிறார்கள்,தேயிலைச் செடிகளும் மலைகளும் கரடுமுரடான பாதைகளும் அங்கமைந்த வாழ்வுமாக
வேற்றுக்கிரக வாசிகளாக அவர்கள் தனித்து விடப்பட்ட ஒரு இனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மற்றைய உறுப்பினர்களுள் தமிழக அரசியல்வாதிகளான திருமாவளவன் அவர்களோ, ஜோதிமணி அவர்களோ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சன்ரிவி என்ற வணிகக் குழுமத்தின் சமபங்காளரான தயாநிதி மாறன் அவர்களோ எமது கவனத்திற்கு தேவைப்படாதவர்கள்.
தமது குடும்ப பலம்பொருந்திய வணிக நிறுவனமான சன்ரிவி குழுமத்தின் வணிக உயர்வினை நோக்காக கொண்டே தயாநிதி மாறன் செயல்படுவார் அதற்கு இந்த இரண்டாவது பாராளுமன்றத்தை நுட்பமாக பயன்படுத்துவார்.
மத்திய அரசில் அங்கம் வகித்த போது தங்கள் குடும்ப நிறுவனமான சன்ரிவியின் நவீன மயப்படுத்தலுக்கு ஊழல்வழியாக புதிய இணைப்புகளைக் கொண்டு வந்தார் என்று வழக்குத் தொடுத்து தயாநிதி மாறனுக்கு இனிச் சிறைதான் என்று ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக கறுப்பு மையில் அழுத்திச் சொன்னனவே தவிர நத்தையைவிட மிகமெதுவாக அது நகர்ந்து ஒரு இடத்தில் குத்திட்டு
நிற்கிறது.அது எங்கே நின்றால்தான் எமக்கென்ன.அதைப்பற்றி ஈழத்தமிழர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை தேவையும் இல்லை.
இதில் அங்கம் வகிக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் இராதாகிருஸ்ணனைத் தவிர்த்து மற்றைய இருவரும் செல்வகுமாரின் கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வி.இவர்கள் காலைப் புதைகுழியில் வைத்தார்கள் கடல்சுழியிலும் வைத்தார்கள்.
இன்றைய சூழலில் சாத்தியப்படுமா சாத்தியப்படாதா என்பதை விட்டு இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இரண்டு தோணிகளில் கால் வைத்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள். ஒன்று தமிழரின் உரிமை. இரண்டாவது போர்க்குற்ற விசாரணை,இலங்கை அரசுடன் சேர்ந்து சமகால நிலவர அரசியலை கவனத்தில் கொண்டு செயல்படுவதா அல்லது போர்க்குற்ற விசாரணையை இறுக்கிப் பிடிப்பதா என்ற இக்கட்டான நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.நமது தமிழ் அரசியல்வாதிகள் இரண்டு தோணிகளில் கால் வைத்து நெடுந்தூரம் பயணிக்க முடியாது. ஏதோ ஒரு தோணியிலிருந்து காலை எடுத்தே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டும் கெட்டான் நிலையில் தொபுக்கென்று விழ வேண்டியதுதான்.
ஆக மொத்தத்தில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற பெயரில் இந்த அமைப்பு அங்கங்கு பயணம் செய்து கூட்டம் நடத்தி குதூகளிக்கும் பொழுது போக்கு மன்றமேயாகும்.
ஈழத்தமிழரின் பார்வையைத் தம்பக்கம் திருப்பவே எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்தமையாகும்.இது தேவைகருதி அல்லது திசை திருப்பல் நோக்கம் கொண்டு உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பாட்ட அமைப்பாகக்கூட இது இருக்கலாம்.ஒரு அமைப்பைப் பற்றி ஏன் எதற்கு என்று சிந்திப்:பதில் தவறேதும் இல்லை.கோவிட் 19 வராவிட்டால் இதுவரையில்
கூட்டம் போடப்பட்டு கீழ்வரும் சுட்டிக்காட்டலுடன் நோக்கங்கள் வெளி வந்திருக்கும்,கிட்டத்தட்ட உதாரணமாக(கற்பனை)
„தமிழ் இனம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முனதோன்றிய மூத்த குடி’
„குமரிக் கண்டம் என்று நீன்றகன்ற நிலப்பரப்பை கொண்டு ஆட்சி புரிந்த வல்லினம்’
„சமூக மேம்பாடுகளில் வியக்கத்தக்கதும் நாகரீக மாந்தராக விஞ்ஞானத்தின் விந்தை பேணிய வாழ்வைக் கொண்ட இனம்.
„கீழடி ஆய்வுகள் மூலம் எமக்குரைத்து முன்மொழிந்து தொன்மைத் தன்மையையும் முதன்மை இனம் என்பதையும் பறைசாற்றிய இனம்’
„மொழிகளுக்கு எம்மொழி தாய.; உலக மொழிகள் அனைத்தும் அதிலிருந்தே தோன்றின,இன்றும் உலகமெல்லாம் நிலைத்திருக்கும் செம்மொழி எம்மொழி’
„உலகையாண்ட இனம், பின்னர் வந்த தமிழ் மன்னர்கள் கடல்கள் எங்கும் நாவாய் ஓடி வணிகம் கொண்டு தேடித்திரவியங்கள் குவித்து வாழ்ந்த இனம்’!
„மதுரையிலே தமிழ்ச் சங்கம் வளர்ந்து எம்பெருமான் சிவனுக்கே சவால் விட்டு நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற திருத்தமிழோன் தமிழர் வாழ் திசையெங்கும் போற்றிய தலைமைத்தமிழன் நக்கீரன் போற்றி வளர்த்த தமிழ்மொழியாண்ட இனம்.’
„படை கொண்டு கடல்கடந்து நாடுகள் பிடித்து வெற்றிக் கொடி நட்ட வீரம் செறி இனம்’
„பல்லினத்துக்குள் புல்லினமாய் மிதிபட்டு மிதிபட்டு சிறுத்துச் சிறுத்து சிறுமை கண்டு துயருற்ற இனத்தினை உலகை ஆள நாம் உருவாக்கியுள்ளோம் இம்மன்றத்தை’ என வரலாம்.
ஈழத்தமிழனை அலைக்கழிப்பதற்கென்றே தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழின் பெயரால் ஆகிய அமைப்புகளில் இலங்கைத் தமிழன் சிக்குண்டு அவர் சொல்லைக் கேட்பதா இவர் சொல்லைக் கேட்பதா என எவர் சொல்லைக் கேட்பதென்று இன்னும் தட்டுத்தடுமாறி, அவருக்காக இவருக்காக என்று படித்து முடித்த பாடங்களின் மேன்மையறியா மீண்டும் பாலபாடத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
வீராப்புப் பேச்சக்களையும் வீண் பேச்சக்களையும் பேசி தமிழகத்தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தி சிங்களவர்களுக்க கொம்பு சீவி விடும் தமிழக அரசியல் வாதிகள் ஒருபுறம், இத்தகு மன்றங்கள் ஒருபுறமுமாய் அதில் சிக்குண்டு
அயலவனோடு பாசம் கொள்ளாது அல்லாடிப் போகின்றனர் இலங்கைத் தமிழர்.
இது இப்படியிருக்க மேலே உள்ள முதல் உலகத் தமிழ் பாராளுமன்றம்,உலகெங்கும் தூதவர்களை நியமிப்பது போல கலை, இலக்கிய,திரைப்படத்துக்கென ஆட்களை நியமிக்க. ஆங்காங்கே தயாரிக்கப்படும் திரைப்படங்களை உங்கள் அனுமதியினறி தயாரிக்க முடியாதெனச் சொல்ல.பெரும்பதவி இது ஐநா செயலாளருக்கு ஒத்த பதவி இது எனக்; கற்பனை கொணடனர் நம்மவர்.தம்பெயர் பிரபலமாகட்டும் என்பதற்காகவும்,அதிலும் இருக்கிறோம் இதிலும் இருக்கிறோம் என விளித்தலுக்கு தேவை என முகவரி காட்டி நிற்பதற்காய் அவரவரும் ஒத்துக் கொள்ள, ஒன்றுமில்லா ஒன்றை ஏதோவொன்று இருப்பதாய் கானல் நீரைத் தேடி ஓடும் மான்களாய் ஓடி கருத்து வேற்றுமைகள்; கொண்டு கோபங்கள் கொண்டு நிற்கையில் இது வெறும் பூஜ்யம் என அறிவுரை சொல்லி இடித்துரைத்தோர் பலர்.இன்றுணர்ந்தனர் உண்மை எதுவென.இழிச்சவாய் இலங்கைத்தமிழர் என நமட்:டுச் சரிப்புக்கு ஆளாகினர் எம்மவர்.
தியாகமும் வீரமும் செறிந்த போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழன் முடிந்த கதையை முடிவுரையாக கொண்டு புதிய அனுசரித்துப் போகும் முன்னுரை அரசியலை முன்னெடுத்தலே சிறப்பு.உனக்கு உன் அயலவனே முக்கியம்.கடல் கடந்தவர் சொல் கேட்டு கலங்கித் தவித்த காலம் இனி வேண்டாம்.எம் நாடு சிறு தீவெனிலும் அதுவே எமக்குரியது.எடுப்பார் கைப்பிள்ளையாய் நீ ஏன் ஆகிறாய்.தாயும் பிள்ளையுமென்றாலும் வாயும் வயிறும் வேறு.
![]()