கவிதைகள்

கஷ்டம் உருவானதால் கலைகிறதே ஆசை!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வண்ணத்துப் பூச்சியாய்

பறந்துவிட ஆசை

வட்டநிலா தன்னைத்

தொட்டுவிட ஆசை

விண்ணெல்லாம் சென்று

சுற்றிவர  ஆசை

விதம்விதமாய் ஆசை

மனமுழுக்க இருக்கு  !

 

வட்டமிடும் வண்டாகச்

சுற்றிவர ஆசை

வண்ணமலர் மீதமர்ந்து

தேனுண்ண ஆசை

கொட்டிவிடும் அரிவியிலே

குளித்துநிற்க ஆசை

கொள்ளையாய் மனிதினிலே

குவிந்திருக்கு ஆசை !

 

சிட்டுக் குருவிகளாய்

திரிந்துவர  ஆசை

தேன்குரலில் குயிலாக

பாடிவிட   ஆசை

வற்றாத நதிபோல

பெருகிநிற்க  ஆசை

மலைபோல மனதுள்

எழுகிறது  ஆசை !

 

பச்சைக் கிளியாக

உருவெடுக்க ஆசை

பழந்தேடிக் கொத்தியே

தின்றிடவும் ஆசை

அச்சமின்றி எங்குமே

சுற்றிவர ஆசை

ஆனாலும் நிலைமையினால்

அடங்கிறதே ஆசை !

 

மயிலாக தோகை

விரித்தாட ஆசை

வாசமுள்ள மலராய்

மலர்ந்துவிட ஆசை

கனியாக மரத்தினிலே

இருந்துவிட ஆசை

கஷ்டம் உருவானதால்

கலைகிறதே ஆசை !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *