கவிதைகள்

பேரன்புள்ள பேரொளியே

திவ்ய வடிவில் அனுதினமும்
எம்முள் எழுந்தருளியிருக்கும் நற்கருணை நாதனே..
இம்மானுடர் அறிந்தும் அறியாமலும் புரிந்த
பாவங்களுக்காக உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றோம்.
என் அருகிலிருந்த கர்ப்பிணி பெண்ணையும்
அவள் சுமந்த கருவினையும்
ஈவு இரக்கமின்றி அழித்த கயவர்களை மன்னியும் இயேசப்பா.

அழகிய இவ்வுலகை படைத்த சர்வவல்லமையுள்ள பிதாவே
அழகிய இவ்வுலகை விட்டு
உமது நித்திய வான்வீட்டில் குடிகொண்டுள்ள
எனது சக உறவுகளை உமது கரங்கொண்டு
அரவணைத்திடும் பிதாவே.
வாழும் காலமதில் அவர்கள் செய்த குற்றங்களை
மன்னித்து ஆசீர்வதியும் நல்லவரே.

உமது தேவதாயாம் புனித கன்னிமரியாளிடம்
எமது நாட்டு மக்களுக்காகவும்
உலகமெங்கும் பரந்து வேதனைப்படும் மக்களுக்காகவும்
உம்மிடம் வேண்டுகின்றேன் இயேசப்பா.
இப்பூமியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாதம்
மற்றும் மதங்களின் பேராலான கொலைகளை நீர்தானே அடக்கியருளும்.
அப்பவடிவில் இவ்வுலகை ஆண்டிருக்கும் பெருமொளியே
தீவிரவாதாத்தினையும் அவர்கள் தம் மூடக்கொள்கைகளையும்
கண்டித்திடும் தேவனே.

இவ்வுலகின் சமாதானத்திற்காக உம்மிடம்
மன்றாடுகின்றேன் இயேசப்பா.
மனிதன் மனிதன் மேல் கொள்ளும் அளவற்ற பொறாமைகளையும்
நிலையில்லா இவ்வுலகை ஆள நினைக்கும் சிந்தனைகளையும்
உமது திருப்பாதத்தில் ஒப்புவிக்கின்றேன் தந்தையே.
அன்பு , பொறுமை , சாந்தம் , விட்டுக்கொடுப்பு போன்ற
நற்பண்புகளை இவர்களின் உள்ளத்தில் விதைத்தருளும் தகப்பனே.
என்றோ இறக்க வேண்டியவர்களை
நீர் இன்றே எடுத்து தூய்மைப்படுத்தும்
நல்லபிதாவே ஆமென்.

-நெடுந்தீவு தனு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.