கவிதைகள்

கசடற்ற உணர்வுதனை காலமெலாம் இருத்திடுவோம் !… கவிஞர்.. ஜெயராமசர்மா …. மெல்பேண்.

சாதிக்க வேண்டுமெனில் சகிப்பங்கு தேவையாகும்

                    போதிக்க வேண்டுமெனில் பொறுமையங்கு முதலாகும்

              வாதிக்க வேண்டுமென்று மனமெண்ணும் எண்ணமதை

                      சாதிக்கும் போதிக்கும் வழிசெலுத்தல் நன்மையன்றோ  !

              வீண்வாதம் விரோதம் வேதனைக்கு வித்தாகும் 

                    வித்ததனை விருட்சமாய் ஆக்கிவிட  முனையாதீர்

              மனமதிலே நல்லெண்ணம் எனும்விதையை ஊன்றிவிடின்

                      மாநிலத்தில் நல்வாழ்வு சோலையங்கு தோன்றிவிடும்  !

              உயர்வுபற்றிப் பேசுகிறோம் தாழ்வுபற்றிப் பேசுகிறோம் 

                      உணர்வுபற்றி நினைப்பதற்கு உணர்வற்றே இருக்கின்றோம் 

               உணர்வுடனே வாழுகிறோம் எனுமுணர்வு உருவாகின் 

                       உலகிலெந்த பிரச்சனையும் உருவாக இடமுண்டோ !

             சன்மார்க்கம்  நன்மார்க்கம்  எனுமுணர்வை  வளர்த்திடுவோம் 

                   சண்டையிடும் பேயுணர்வை தானழித்து  நின்றிடுவோம் 

             களங்கமற்ற அத்தனையும் கருத்திருத்த உணர்ந்திடுவோம் 

                    கசடற்ற உணர்வுதனை காலமெலாம் இருத்திடுவோம் ! 

                     

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.