உலகம்

அயர்லாந்துக்கு ட்ரம்ப் திடீர் பயணம் ; போராட்டத்தில் குதித்த மக்கள்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத் தில் நடக்கும் ‘ஐரிஷ் ஓபன்’ கோல்ப் போட்டியை ரசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டியில் அவரே நேரில் நின்று கோப்பையையும் வழங்குகிறார்.

இது அரசுமுறைப் பயணம் இல்லை என்றாலும், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

அயர்லாந்தில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *