இலங்கை
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சம்மேளனத்தின் செயலாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மை காலத்தில் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து கிட்டத்தட்ட 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், அதேவேளையில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை 2015 இல் சுமார் 25,000 ஆக இருந்ததில் இருந்து இன்று சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]()