உலகம்

பிரித்தானியாவில் 140000 பேரின் வாகன உரிமங்கள் இரத்து

பிரித்தானியாவில் வாகன ஓட்டிகளின் மருத்துவ நிலைமை தொடர்பில் DVLAஇற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறிவுறுத்தலுக்கு அமைய தகவல் தெரிவித்திருந்த 01 இலட்சத்து 40 ஆயிரம் பேரின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், உரிமங்கள் திரும்பப் பெறப்படலாம்.

வயதான ஓட்டுநர்கள் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்த அரசாங்கம் தயாராகி வரும் வேளையில், இந்த சமீபத்திய அறிவிப்பு வந்துள்ளது.

இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தகுதியானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க, கட்டாயப் பார்வைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பர்மிங்காம் லைவ் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button