உலகம்

திபேத் எல்லையில் உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

அங்கு ஊடகங்களுக்கு அதிகளவான கட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனினும் உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் அங்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

அத்துடன் திபெத்திய எல்லைப் பகுதியில் பல சீனக் கட்டுமானத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் பகுதியாக உள்ள ‘கியிரோங் கவுண்டி’எல்லையில் 4,000 பேர் வசிப்பதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button