பலதும் பத்தும்

இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?

வீட்டில் உள்ள பெரியவர்கள் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன, இது மூடநம்பிக்கையா அல்லது நடைமுறை காரணமா என்பதைப் பற்றி பார்க்கலாம்.

சிலர் இதை மூடநம்பிக்கை என்று கூறினாலும், பழங்காலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் நகம் வெட்டும்போது காயம் ஏற்படும் அபாயம் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.

முற்காலங்களில் மின்சார விளக்குகள் இல்லாததால், எண்ணெய் விளக்கு போன்ற மங்கலான வெளிச்சத்தில்தான் இரவில் நகம் வெட்ட வேண்டியிருந்தது. இதனால் தவறுதலாக விரல்களில் காயம் ஏற்பட வாய்ப்பு இருந்தது.

மேலும், நகத் துண்டுகள் தரை, படுக்கை அல்லது சோஃபாவில் விழுந்தால் அழுக்கு மற்றும் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உணவு தயாரிக்கும் அல்லது சாப்பிடும் இடங்களில் நகம் வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

படுக்கை அல்லது சோஃபாவில் அமர்ந்து நகம் வெட்டும்போது, நகத் துண்டுகள் துணி அல்லது போர்வையில் விழக்கூடும். எனவே, நகம் வெட்டும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. பழங்கால பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளே இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

எப்போது நகம் வெட்டலாம்? நல்ல வெளிச்சம் இருக்கும் நேரத்தில் நகம் வெட்டுவது பாதுகாப்பானது. முன்பும், பிறகும் கைகளை சுத்தம் செய்து, காகிதம் அல்லது துணி விரித்து, நெயில் கிளிப்பர் பயன்படுத்தி நகங்களை வெட்டுவது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button