உலகம்

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்!

அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் இஸ்லாமாபாத் கூறியுள்ளது.

ஊடக சந்திப்பின் போது பாகிஸ்தான் வெளிவிவகார அலுவலக செய்தித் தொடர்பாளர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கும் உச்சிமாநாட்டிற்கான அழைப்புகள் விடுக்கப்படும் என்றும், இதன் மூலம் இந்தியாவும் அந்த அமைப்பின் உறுப்பினராக அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மணிலாவில் நடைபெறும் ஆசியான் (ASEAN) கூட்டங்களின் ஒரு பகுதியாக, வெளிவிகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் பாகிஸ்தான் வெளிவிகார அமைச்சருக்கும் இடையே சாத்தியமான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புது டெல்லியிடமிருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் வந்திருப்பது குறித்து இஸ்லாமாபாத்திற்குத் தெரியாது என்றும் கூறினார்.

2027-ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்திழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளது.

ஷாங்காய் ஒத்திழைப்பு அமைப்பு உச்சிமாநாடு என்பது ஒரு முக்கியமான வருடாந்திர சர்வதேச மன்றமாகும்.

இது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஜூன் 15-அன்று பெய்ஜிங்கில் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் முதன்மை நோக்கம், யூரேசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button