உலகம்

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

வொஷிங்டனின், சியாட்டல் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின்போது ஞாயிற்றுக்கிழமை (26) நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட நால்வர் காயமடைந்தனர் என்று கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டாவது நபர் ஒருவரும் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும், அவரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சியாட்டில் மையத்தில் நடைபெற்ற ‘பைட் ஆஃப் சியாட்டில்’ (Bite of Seattle) உணவுத் திருவிழாவின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button