உலகம்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த கடும் போராட்டம்: பிரான்ஸ், ஸ்பெயினுக்கு விமானங்கள் அனுப்பி வைப்பு

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தீயணைப்புக் குழுவிலிருந்து 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘rescEU’ குழுவிலிருந்து ஐந்து விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரான்ஸிலும், நான்கு விமானங்கள் சனிக்கிழமையன்று ஸ்பெயினிலும் களமிறக்கப்பட்டுள்ளதாக விளக்கியுள்ளார்.

காட்டுத் தீ காரணமாக ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் அவிலா (Ávila) ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 59,488 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 28,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, வெளியேற்றப்பட்ட மற்றும் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை விபரம்:

அவிலா மாகாணம்:

வீடுகளுக்குள் முடங்கியுள்ளோர் – 8,000

வெளியேற்றப்பட்டோர் – 30,000

மாட்ரிட் சமூகம் (Community of Madrid):

வீடுகளுக்குள் முடங்கியுள்ளோர் – 20,262

வெளியேற்றப்பட்டோர் – 29,488

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button