பலதும் பத்தும்

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டிக்காக, சவுதி அரேபியா ஒரு நவீன மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்த மைதானத்தை அமைக்கவுள்ளது.

எதிர்கால நகர மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தரைமட்டத்திலிருந்து 350 மீட்டர் உயரத்தில் இந்த மைதானத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2034-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியை சவுதி அரேபியா நடத்தவுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 11 அன்று நடைபெற்ற ஃபிஃபாவின் சிறப்புக் கூட்டத்தில், போட்டியை நடத்தும் நாடாக சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டது

2022-இல் கட்டாரில் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர், மத்திய கிழக்குப் பகுதியில் இப்போட்டி நடைபெறவுள்ளது இதுவே இரண்டாவது முறையாகும்.

இப்போட்டி 48 அணிகள் பங்கேற்கும் வகையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரி வரைபடம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button