பலதும் பத்தும்

மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் நிலக்கடலை சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் கரட்டலுங்கல், செங்கனி, வெள்ளக்கடன் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவரின் மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும், குடும்பத்தினர் அந்த குழந்தையை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறிய நிலையில் குழந்தை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த குழந்தை மஞ்சேரி வைத்தியக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவனது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button