கவிதைகள்
பெருகுதல்… கவிதை…. முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

திரைகள் பெருகும் பொது
குழந்தைப் பருவம்
காணாமல் போகிறது.
மதிப்பெண்கள் பெருகும் போது
அறிவுகள்
விற்பனை ஆகிறது.
பணம் பெருகும் போது
உறவுகள்
இசைவிற்குள் நுழைகின்றன.
போதை பெருகும் போது
குடும்பம்
தலைவிரித்தாடுகிறது.
ஆசைகள் பெருகும் போது
நிம்மதி
கேள்வியாகிறது.
கனவுகள் பெருகும் போது
நித்திரை
நிதானத்தை இழக்கிறது.
சிலைகள் பெருகும் போது
சிந்தனைகள்
சாகின்றன.
போட்டி பெருகும் போது
நட்பு
சிதறி விடுகிறது.
அதிகாரம் பெருகும் போது
அறம்
மரித்துப் போகிறது.
ஏமாற்றங்கள் பெருகும் போது
நினைவுகள் மட்டுமே
மிஞ்சுகின்றன.
நரை பெருகும் போது
வாழ்க்கையின் அர்த்தங்கள்
கைக்கோர்க்கின்றன.

![]()