இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை கதிகலங்க விட்ட பெண் : அலறும் தென்னிலங்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.

இவ்வாறு ராஜபக்ச மீது தொடரப்படும் வழக்குகளாக இருந்தாலும் சரி ஏனைய பல அமைச்சர்கள் மீது தொடரப்படும் வழக்குகளிலும் பலரை கூண்டுக்குள் முன்னிலைப்படுத்திய ஒருவர்தான் டில்றுக்ஷி விக்ரமசிங்க.

இவர் இலங்கையின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியவர். இந்நிலையில், அக்காலப்பகுதியில் தொடரப்பட்ட வழக்குகளின் பின்னணியில்தான் தற்போது வழக்குகள் கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button