உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு மற்றும் கட்டார் உட்பட பல்வேறு நாடுகள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்க உதவிய பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தினால், அதன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி திறக்க வேண்டும் எனவும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button