இலங்கை

651 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்; கறுப்புக் கொடிகளுடன் பலாலி சந்திவரை பேரணி 

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக  ஆறாவது தடவையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் ,வெள்ளிக்கிழமை(29) கறுப்புக்கொடிகளைத் தாங்கியவாறு பலாலி சந்திவரை ஊர்வலமாக போராட்டத்தை முன்னடுத்தனர்.

கறுப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரை பேரணியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button