உலகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்​ரோல், டீசல் மற்றும் சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த கண்டன போராட்டம் வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே இடம்பெறுள்ளது.

போக்​கு​வரத்​து மற்றும் அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வுக்கு காரண​மான பெட்​ரோல், டீசல் விலை உயர்வையும் உணவகங்​கள், சிறு தொழில்​கள் மூட காரண​மான வணிக சிலிண்​டர் விலை உயர்வையும் கைவிட வேண்​டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்​தி​யா​வசி​ய​மான பொருட்கள் அனைத்து மக்​களுக்​கும் குறை​வான விலை​யிலும், தட்​டுப்​பாடு இன்றியும் கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என போராட்டத்தில் பங்கேற்ற மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்​பி, விசிக பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் உள்​ளிட்​டோர் இந்த போராட்டத்தில் பங்​கேற்​றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button