உலகம்

மத்தியதரைக் கடலில் ரஷ்யாவின் பாரிய எரிவாயு கப்பல் வெடிக்கும் அபாயம்

ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலின் தீவிரத்தன்மை காரணமாக பாரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இக்கப்பல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடல்சார் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், அதன் ஒரு பக்கத்தில் பெரிய துளை ஏற்பட்டு பலத்த சேதமடைந்துள்ளது. இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த கப்பலில் மாலுமிகள் எவரும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *