உலகம்

ஈரான் தாக்குதலில் அமெரிக்க படையினர் 13 பேர் பலி; 200 பேர் காயம்

மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில், இதுவரை அமெரிக்க வீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேர் காயம் அடைந்துள்ளனர் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ஆம் திகதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றது.

அமெரிக்காவும் சேர்ந்து இஸ்ரேல் , ஈரான் மீது நடத்திய தாக்குதலில் 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ள அதேநேரத்தில், லெபனானில் மேலும் 886 பேர் இறந்துள்ளனர். வளைகுடா போரினால் லெபனானிலும் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேபோல் மூன்று வாரங்களாக நடந்த சண்டையில் அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்பு, இராணுவ ஜெட் விமானங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தயு நிலையில் மத்திய கிழக்கில் நீடிக்கும் போரினால் , உலகில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் – ஈரான் போரானது உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *