முச்சந்தி

இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு!

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் காணிகள் விடுவிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *