பலதும் பத்தும்

இலங்கை துறைமுகத்தில் ஈரான் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்தவர்களை மீட்கும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, கடலில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *