இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஈரான் ஏவுகணைகள்; பலர் உயிரிழப்பு; உருக்குலைந்த குடியிருப்புகள்

ஈரான் உச்ச தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் ஈரான் ஆக்ரோசமான பதிலடி தாக்குதலை ஏவுகணைகள் மூலம் நடத்தி வருகிறது.
இதன்படி இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமில் உள்ள பெய்ட் ஷெமேஷ் பகுதியில் ஈரான் ஏவுகணை கடுமையாக தாக்கியது. இதில் 4 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து போனது. தாக்குதலில் 9 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதில் பலர் குழந்தைகள் ஆவார்கள்.
ஏவுகணை நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியைத் தாக்கியது
இந்த ஏவுகணை நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியைத் தாக்கியது, ஒரு ஜெப ஆலயத்தை அழித்தது மற்றும் அதன் கீழ் இருந்த பொது தங்குமிடம் மற்றும் சுற்றியுள்ள வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழப்பு
சம்பவ இடத்திலேயே எட்டு பேர் இறந்ததாக அறிவித்த மேகன் டேவிட் அடோம் அம்புலன்ஸ் சேவை, 28 பேரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாகவும், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியது.
![]()