இந்தியா

கோவையில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு – ஸ்டாலின் பங்கேற்பு!

கோயம்புத்தூரில் இன்று நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக தனது அடிமட்ட அளவிலான தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

 

 

ஸ்டாலின் திமுக

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு, முகவர்களுக்குத் தேர்தல் காலப் பணிகள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார். கடந்த காலங்களில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் திமுக சந்தித்த சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை அந்தப் பகுதிகளில் வெற்றியை உறுதி செய்யச் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து முகவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஸ்டாலின்

சமீபத்தில் திருப்பத்தூர் மற்றும் இதர மண்டலங்களில் இத்தகைய முகவர்கள் கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. தற்போது கோவையில் நடைபெறுவது, கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முகவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *