பலதும் பத்தும்

பாலைவனம் – மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு…

பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான காலநிலையும் நிலப்பரப்பும் இருக்கும்.

ஆனால் சில நாடுகள் மிகவும் வித்தியாசமான இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளன.

அந்தவகையில், பாலைவனம் மற்றும் மலைக்காடுகள் இரண்டையும் கொண்ட ஒரே நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்.

அந்தவாகயில், ஆஸ்திரேலியா நாட்டில் தான் பாலைவனமும் பசுமையான மழைக்காடும் இருக்கிறது.

இந்த நாட்டின் மையப் பகுதி அதிக வெப்பம் மற்றும் குறைந்த மழையால் பாலைவனமாக உள்ளது.

கிரேட் விக்டோரியா, கிரேட் சாண்டி, சிம்ப்சன், தனாமி போன்ற பெரிய பாலைவனங்கள் இங்கு காணப்படுகின்றன.

இவ்வளவு வறண்ட நிலம் இருந்தாலும், அங்கு தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன. அவை வெப்பத்தையும் தண்ணீர் பற்றாக்குறையையும் தாங்கும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.

அதேநேரத்தில், குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் அடர்ந்த மழைக்காடுகள் உள்ளன.

இங்கு அதிக மழை பெய்வதால் பலவிதமான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.

டெய்ன்ட்ரீ மழைக்காடு உலகின் மிகவும் பழமையான மழைக்காடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவில் சவன்னா புல்வெளிகள், மலைத்தொடர்கள், ஆறுகள், கடற்கரைகள் மற்றும் கிரேட் பேரியர் ரீஃப் போன்றவை உள்ளன.

இவ்வாறு பலவிதமான இயற்கை அமைப்புகள் ஒரே நாட்டில் இருப்பதால், ஆஸ்திரேலியா மிகவும் சிறப்புத்தன்மை கொண்ட நாடாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *