பலதும் பத்தும்

உலகில் முதலில் தங்க நகை அணிந்தவர்கள் யார் தெரியுமா?

தங்கம் ஒரு அரிய மற்றும் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டிற்கான பிரபலமான ஒரு பண்டமாக அறியப்படுகிறதென்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தங்கம் வாங்குவதற்கும், அதனை சேமிப்பதற்கும் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. காரணம் தங்கத்தின் மதிப்பு உயருமே தவிர ஒருபோதும் குறையாது என்பது தான்.

உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரிகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தையே குறிப்பிட்டது என்றால் மிகையாகாது.

ஆனால் உலகில் முதல் முதலில் தங்கத்தை பயன்படுத்தியபவர்கள் யார் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

மருத்துவ மற்றும் குணப்படுத்தும் நோக்கங்களுக்காக தங்கம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆரம்ப பதிவுகள் எகிப்திய நாகரிகத்திலிருந்து வந்தவை என்று தான் வரலாறு குறிப்பிடுகின்றது. அதாவது உலகில் முதல் முதலில் தங்கத்தை பயன்படுத்தியவர்கள் இவர்கள் தான்.

அதாவது மனிதன் தங்கத்தை எப்போது முதல் நகைகளாகப் பயன்படுத்தினான் என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும். அதற்கான பதிலான கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வர்ணா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ புதையல் தான் கொடுத்தது.

அதாவது உலகிலேயே மிகப் பழமையான தங்க நகைகள் பல்கேரியாவின் கருங்கடல் பகுதியான வர்ணாவில், 1972-1991 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை, உலகின் மிகப் பழமையான தங்க ஆபரணங்களைக் கொண்ட இடமாகக் அறியப்படுகின்றது.

1972ஆம் ஆண்டு, பல்கேரியா நாட்டின் கருங்கடல் கரையோரத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தபோது தொழிலாளர்கள் சில பழமையான கல்லறைகளை கவனித்தார்கள்.

அதனை தொடர்ந்து குறித்த பகுதியில், தொல்பொருள் ஆய்வாளர்கள் விரிவான அகழாய்வை மேற்கொண்டனர். அப்போது தான் நூற்றுக்கணக்கான கல்லறைகள் கண்டறியப்பட்டது. ஆய்வுகளின் மூலம் இந்தக் கல்லறைகள் கிமு 4600 முதல் 4300 காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டது.

அதில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆபரணங்களே 6,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையானவை.அந்த கால மக்கள் தங்கத்தை உருக்கி வடிவமைக்கும் நுட்பத்தை அறிந்திருந்தே ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் கல்லறையில் அதிக அளவில் தங்கம் இருந்ததால், அது ஒரு உயர் பதவியில் இருந்த நபரின் கல்லறையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்பு, மனிதர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தை அலங்காரமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் பயன்படுத்தினார்கள் என்பதையும், பழங்கால சமூகங்களிலும் கூட சமத்துவம் இருக்கவில்லை.

செல்வமும் அதிகாரமும் சிலரிடம் குவிந்திருந்தன என்பதை உலகிற்கு மீண்டும் ஒரு முறை பறைசாற்றியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *