கவிதைகள்

அன்னையின் பாலமுது…. கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

பா வகை: ஆசிரியத் துறை
(ஈற்றயலடிக் குறைந்து நான்கடியாய் வந்த ஆசிரியத் துறை)

இன்றைய உலகில் எம்மை ஈன்ற
அன்னையும் அன்புடன் அளித்தப் பால்தான்
என்றும் வாழ்வினில் எம்மையும்
நன்றாய்க் காத்து நலமுடன் வைக்குதே!

வள்ளுவர் அளித்த வான்புகழ் முப்பால்
தெள்ளியக் கருத்தைத் தேனாய்த் தருமே!
அள்ளி யணைத்தே அன்னையும்
வெள்ளமாய்த் தந்தபால் வீறுமே அளிக்குமே!

உன்னைக் காக்கவே உலகில் வாழ்பவள்
அன்னையே என்பதில் ஐயமும் உண்டோ
அன்னையின் பாலுமே அமுதமே
அன்னை அளித்தபால் ஆயுளை நீட்டுமே!

அன்பு ஜெயா, சிட்னி

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *