பலதும் பத்தும்

நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள்

சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்து விடும், இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ள நிலையில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம்.

முன்கூட்டிய நரை முடியை போக்க இயற்கை வழிகள் உள்ள நிலையில் ரோஸ்மேரி வாட்டர் மூலம் தலையை மசாஜ் செய்வது முன்கூட்டிய நரை மற்றும் முடி உதிர்வைத் தடுக்க நல்லது. அத்தோடு ரோஸ்மேரி கலந்த நீரால் தலையைக் கழுவுவதும் நல்லது.

ஒரு கைப்பிடி துளசி இலைகள், மருதாணி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் உலர் நெல்லிக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தலையை கழுவி வந்தால் நரை முடி சீக்கிரமாக கருமையாகும்.

அத்தோடு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி கருமையாகி சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்தநிலையில், வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும் இதிலிருந்து வெந்தயத்தை நீக்கிய பின் அந்த நீரில் வெங்காயச்சாறு சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்தால் முடி கருமையாக மாறும், இந்த நீரால் தலையை 20 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவவும்.

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உலர் நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து தலைமுடியில் தடவினால் நரை முடி பிரச்சினை சீக்கிரமாக மாறும்.

காபி பவுடரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து உங்கள் தலை முடியில் தடவவும் இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் இவ்வாறு செய்வதால் நரைத்த முடிகள் சீக்கிரமாக கருமையாக மாறும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button