கவிதைகள்
தமிழரின் தை பொங்கலே வா!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

தை மாதம் பிறந்தது தை மகளே வா
தமிழரின் வாழ்வை உயர்த்திடவே வா
தை மாதமே தமிழர்க்கு வழிகாட்ட வா
தை மாதம் அறுவடைக்கு இங்கு வா
கதிரவனுக்கு நன்றி சொல்வோம் வா
தமிழ்ப் பொங்கல் கொண்டாடவே வா
வந்தாரை வாழவைப்போம் இங்கு வா
வந்தவரைப் பொங்கலில் வாழ்த்த வா
தைப்பொங்கல் தமிழ்ப்பொங்கலே வா

![]()