உலகம்
கழிவுத் தொட்டிகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் விதிகளை மீறினால் அபராதம்

இங்கிலாந்து முழுவதும் கழிவுத் தொட்டிகளைப் பயன்படுத்தும் குடும்பங்கள் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவு மேலாண்மை விதிகளை குடியிருப்பாளர்கள் பின்பற்றத் தவறும் போது அபராத அறிவிப்புகளை வழங்குவதற்கான பொருத்தமான சூழ்நிலைகள் மற்றும் நேரம் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதன்படி, கழிவு சேகரிப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், அத்தகைய நடத்தை ஒரு தொந்தரவை உருவாக்கினால் அல்லது உருவாக்கக்கூடும் என்றால், அல்லது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தினால் அல்லது உள்ளூர் குடியிருப்பு பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பு இருந்தால்” அபராதம் விதிக்க முடியும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
![]()