உலகம்
மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா; அதிகரிக்கும் போர் பதற்றம்

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்தியது.
இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தத் தாக்குதல் தொடா்பான விடியோ காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இத்துடன், கடந்த செப்டம்பா் முதல் 29 படகுகள் மீது அமெரிக்கா இதே போன்று நடத்திய தாக்குதல்களில் 105 போ் கொல்லப்பட்டுள்ளனா்.
இது சட்டவிரோத படுகொலை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
![]()