உலகம்

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு 50,000 கூடுதல் இடங்களை பொதுப் பள்ளிகளில் உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதியை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.

திட்டமிடப்பட்ட சில புதிய இலவசப் பள்ளிகளைக் (Free Schools) ரத்து செய்வதன் மூலம் இந்த நிதி ஓரளவு பெறப்படுகிறது. இதன் மூலம், கவுன்சில்கள் தற்போதுள்ள பள்ளிக் கட்டிடங்களை மாற்றி, சிறப்பு வசதி இடங்களை உருவாக்க முடியும்.

இந்த நடவடிக்கையைச் சில பள்ளித் தலைவர்கள் வரவேற்றாலும், எதிர்க்கட்சிகள் இதனை “கல்வி நாசவேலை” எனக் கண்டித்துள்ளதுடன், கட்டிட முதலீட்டுடன் போதுமான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு ஆதரவு வழங்கப்படாததால், கவுன்சில்களுக்கு எதிரான சட்ட முறையீடுகள் 18% உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *