இலங்கை

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்ட ஐ.நா. முயற்சி!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து முயற்சித்து வருவதாக, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அவர், டித்வா சூறாவளி நாடு முழுவதும் அழிவு பாதையை ஏற்படுத்திய பின்னர், ஐ.நா. பேரிடர் மேலாண்மை மையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார்.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கிய ஆதரவுடன், இந்த முயற்சிக்காக ஐ.நா ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைந்த திட்டத்துடன் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *