இலங்கை

அரசின் மீதான நம்பிக்கையாலேயே பட்ஜட்டை தமிழரசு எதிர்க்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி விலகி இருந்தது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் உங்கள் மீது முன்வைத்த விமர்சனக்கணைகளையே எம்மை நோக்கி மீளச் செலுத்த வேண்டாம். புதிய ஆயுதம் என்பது, எம்மைவிட சிறந்த திட்டங்கள் அவசியம் என்பதாகும்.

தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பர் மாதமும் அவ்வாறேதான்.

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த உரிமை என்பது புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல.

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் (ஜே.வி.பி. மாவீரர்களுக்கு) நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவுத் தூபி எம் மனங்களில் இருந்தால் போதும். – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *