உலகம்

4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் மீண்டும் திறக்கப்பட உள்ள இந்திய தூதரகம்

2021ம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மூடப்பட்ட காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர், புதுதில்லியில் தனது ஆப்கானிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவை வெளியிட்டார்.

“எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மீள்தன்மைக்கும் பங்களிக்கிறது” என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி” ” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *