உலகம்

கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெறுள்ளது. ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியுள்ளது.

விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது பறவை மோதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது . அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் கொழும்புக்குத் திரும்புவது குறித்து விமான அதிகாரிகள் கவலை தெரிவித்தனர் .
பயணிகள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மாற்று விமானத்தில் 137 பயணிகள் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பறவை மோதியதால் விமானத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும், மேலும் ஆய்வுக்குப் பிறகுதான் இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, அமிர்தசரஸிலிருந்து பிரித்தானியாவின் பர்மிங்காமுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் எலி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *