உலகம்

இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்

இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர்.

சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பலனளிக்கும் வகையில் இருதரப்பு உறவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரு தரப்பினரும் அந்தந்த நவீனமயமாக்கல் செயல்முறைகளில் கைகோர்த்து முன்னேறி, இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளைத் தருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், உயர் மட்ட ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை வலுப்படுத்தவும், பலதரப்பு வர்த்தக அமைப்பையும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கூட்டாகப் பாதுகாக்கவும் சீனா தயாராக உள்ளது.

இதனால் சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அனைத்து வகையான உயர்தர கூட்டாண்மையை ஊக்குவிக்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, செழிப்புக்கு இன்னும் அதிக பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூர்-சீனா உறவுகள் முழுமையான உயர்தர கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டதாகவும், இரு அரசாங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தொடர்ந்து புதிய அம்சங்களை ஒருங்கிணைத்து, தொலைநோக்கை வெளிப்படுத்துவதாகவும் சிங்கப்பூர் ஜனாதிபதி சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

காலத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இரு தரப்பினரும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இரு நாட்டு மக்களும் கலாச்சார உறவுகளை சீராக வலுப்படுத்தியுள்ளனர்.

இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும், இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு கொண்டுச் செல்லும் என்றும் ஜனாதிபதி சண்முகரத்தினம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோரும் குறித்த நாளில் தமது வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *