பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறியதற்கு பதிலளித்த EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரிடம் விசாரணை நடத்தினால் யுத்தக் குற்றங்களில் அவரது பங்கு தெரியவரும் என தெரிவித்தார்.
செம்மணிப் புதைகுழி, பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்டவை யுத்தக் குற்றங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அருண ஜயசேகர, முன்னாள் இராணுவ வீரர் என்பதால் முப்படைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு பேசுவதாகவும், உள்ளக விசாரணைகள் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது எனவும் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.
சர்வதேச விசாரணை மூலமே உண்மைகளை நிரூபிக்க முடியும் எனவும், இலங்கை அரசாங்கங்கள் முப்படைகளைப் பாதுகாக்கவே முயல்வதாகவும், இதனால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளக விசாரணைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
![]()