உலகம்

ஆஸ்திரேலியாவில் முக்கிய நகர மையங்களை மூடிய பொலிஸார்!

ஆஸ்திரேலியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் தலைநகரில் பொலிஸார் முக்கிய நகர மையங்களை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியமான மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மெல்போர்ன், சிட்னி மற்றும் பிற தலைநகரங்களில் ஒன்றுக்கூடிய போராட்டக்காரர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் மோசமடைதல், குறைந்து வரும் சுகாதார விளைவுகள், அதிகரித்து வரும் வன்முறை, நிதி நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் குறித்து போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் சிலர் ‘நாங்கள் வலதுசாரிகள் அல்ல, நாங்கள் சரியாக இருக்கிறோம்’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *