இலங்கை

அப்பாச்சி மஹிந்தவிடம் ஹக்கீம் சொன்னது என்ன?

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் உதவி போரின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும் உலக பாசிச எதிர்ப்பு போரை நினைவு கூரும் வகையில் சீனா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்,  இடம்பெற்றது.

இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஏதோவொரு ரகசியம் ​கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பேரும் பொருளாக இருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக, கிராமங்களில் விளைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த தேரர்கள் தலைமையிலான ஒரு குழுவினர், அப்பாச்சியை பார்வையிட வந்தோம் என்றனர்.  ஆகையால், அப்பாச்சி பேசும் பொருளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *