உலகம்

மொன்டானா விமான விபத்து – ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதால் பெரும் தீ விபத்து

மொன்டானா விமான நிலையத்தில் திங்கட்கிழமை தரையிறங்கிய ஒரு சிறிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு பேரை ஏற்றிச் சென்ற ஒற்றை எஞ்சின் விமானம் பிற்பகல் 2 மணியளவில் கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றதாக கலிஸ்பெல் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் மோதிய பின்னர், விமானம் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது மோதியதாகவும், இதில் பல விமானங்களில் தீப்பிடித்தது என்று கலிஸ்பெல் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தீ அணைக்கப்படுவதற்கு முன்பு புல்வெளிப் பகுதிக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடுபாதையின் முடிவில் ஒரு விமானம் மற்றொரு விமானத்தில் மோதியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்ததாக கலிஸ்பெல் தீயணைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பயணிகள் தாங்களாகவே வெளியே வர முடிந்தது என்றும், இருவர் லேசான காயமடைந்து விமான நிலையத்தில் சிகிச்சை பெற்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *