பலதும் பத்தும்

பாம்புகளை விவசாயம் செய்யும் விசித்திர நாடு?

பாம்புகளை விவசாயம் செய்யும் ஒரு விசித்திர நாடாக வியட்நாம் காணப்படுகின்றது. அங்கு ட்ரை ராச் டோங் டாமில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.

ட்ரை ராச் டோங் டாமில் ஆண் மற்றும் பெண் பாம்புகளுக்கு ஒரு சரியான சூழல் வழங்கப்படுவதால் அதிக முட்டையிடுகின்றன.

இந்தநிலையில், இவ்விடம் பாம்புகளின் தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பாம்பு வளர்ப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பண்ணையில் 400 இற்கும் மேற்பட்ட வகையான விஷ பாம்புகள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

அத்தோடு, அவற்றின் விஷங்கள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான டோங் டாம் பாம்புப் பண்ணையை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button