பலதும் பத்தும்

மத்திய கிழக்கு வான்பரப்பு மீண்டும் திறப்பு

கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஈரான், கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தையும், ஈராக்கில் உள்ள மற்றொரு அமெரிக்க தளத்தையும் குறிவைத்து நேற்று (ஜூன் 23, 2025) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தன.

இதன் விளைவாக, ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பறந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஐந்து விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்தது. இந்த விமானங்கள் மஸ்கட், டுபாய் மற்றும் ரியாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அந்த சபை உறுதிப்படுத்தியது.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கட்டார் தனது வான்பரப்பை மீண்டும் திறந்துவிட்டதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக கட்டார் அரசு தெரிவித்துள்ளது.

குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் வான்பரப்புகளை மீண்டும் திறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button