இந்தியா

ஒபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக இந்திய முப்படை தலைமை தளபதி தகவல்

சிங்கப்பூர்: ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும் பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா மன்றத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்: இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான மோதலின் முதல் நாளில் இந்தியா வான்வழி இழப்புகளை சந்தித்தது. பிறகு இந்தியா தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டது. அதன்பிறகு மூன்று நாட்கள் நடந்த மோதலில் ஒரு தீர்க்கமான நன்மையை இந்தியா பெற்றது.

மே 7 8 மற்றும் 10-ம் தேதிகளில் பாகிஸ்தானுக்குள் உள்ள விமானத் தளங்களைத் தாக்கினோம். அவர்களின் அனைத்து வான் பாதுகாப்புகளையும் ஊடுருவி துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம்.

பெரும்பாலான தாக்குதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளியில் இருந்து ஒரு மீட்டர் வரை மட்டுமே இருந்தது.

மோதலின் போது அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்பட்ட எந்த இடத்திலும் எந்த ஆபத்தும் இல்லை. அணு ஆயுதங்கள் வரம்பைத் தாண்டுவதற்கு முன்பு நிறைய இடம் இருப்பதாக நான் நினைக்கிறேன் அதற்கு முன்பு நிறைய சமிக்ஞைகள் இருந்தன அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். வழக்கமான நடவடிக்கைகளுக்கு நிறைய இடம் உருவாக்கப்பட்டுள்ளதுஇ இது புதிய விதிமுறையாக இருக்கும்.

மோதல் நடக்கும்போது மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள் சீருடையில் இருப்பவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த நடவடிக்கையின் போது இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் நிறைய பகுத்தறிவைக் காட்டியதைக் கண்டேன்.

சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாலும் மோதலின் போது பெய்ஜிங்கிலிருந்து எந்த உண்மையான உதவியும் அதற்கு கிடைக்கவில்லை. ஏப்ரல் 22-ம் தேதி முதல் நமது வடக்கு எல்லைகளில் எந்த அசாதாரண நடவடிக்கையையும் நாங்கள் காணவில்லை. பொதுவாக விஷயங்கள் சரியாக இருந்தன.

போர் நிறுத்தப்பட்டிருந்தாலும் பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் பதிலளிப்போம். இவ்வாறு பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *